Friday, April 30, 2010

காதல் கவிதை!!

நீ இல்லா இரவுகளில்...

நிலவினை ரசிக்கிறாய் அழகென்று!
நிலவுகள் பிடிப்பதில்லை
நீ இல்லா இரவுகளில்...

உன் மடியில் தலை சாய்த்து
நிலவு பார் என்பாய்...
பார்ப்பத்தென்ன முத்தமிடுறேன்
என்று முகத்தில் இதழ் பதிப்பேன்!

வெட்கத்தில் பூத்த சிரிப்புளோடு
சில நூறு விண்மீன்களையும்
சிந்துவாய்!

நிலவு முத்தமிடாதா என்பேன்?
முகம் நெருங்கி முத்தமிடாமல்
கன்னம் கில்லுவாய்
மெல்லிய உன் விரல்களால் !

நிலவே நீயில்ல இரவுகள்
எத்தனை கொடியது!!


காதல் கொஞ்சம்...

உன் கண்பார்க்கும்
திசையெங்கும்...
சூரிய ஒளியாய்...
பரவி படர்கிறது..
காதல்...

------------------------------------------------------------------------

நீ நனைவாய்..
என்ற நம்பிக்கையிலேயே ..
வருகிறது போலும்..
மழையும்.

உன்னை நனைக்காமல்..
நிற்பதே இல்லை..
எந்த மழையும்.

------------------------------------------------------------------------

அகல் விளக்கு ஏந்தி...
மிக அழகாய் நீ வந்தால்
கூட்டத்தில் ஒளிந்தபடி...
கடவுளும் பார்த்திருப்பான்.

------------------------------------------------------------------------

படபடவென பேசும்
தருணங்களில்...
நீ..
அழகானவள்.
மௌனம் போர்த்தி
அமர்ந்திருக்கும் தருணங்களில்..
நீ...
பேரழகானவள்..

------------------------------------------------------------------------

கிளி ஜோசியம் பார்க்க வேண்டி..
அடம்பிடிக்கிறாய்.
ஏன் உனக்கு புரிவதில்லை...
கிளி சீட்டெடுத்து போடுவதுதான்..
கிளி ஜோசியம்....
கிளிக்கு சீட்டெடுத்து போடுவதல்ல...

------------------------------------------------------------------------

நான் காதலை
தேடிக் கொண்டிருந்தேன்...
நீ வந்தாய்...
இப்பொழுது...
என்னை தேடிக் கொண்டிருக்கிறேன்.

------------------------------------------------------------------------

உன்னையறியாமல் நீ..
என் தோள் சாய்ந்து..
உறங்குகிறாய்...
தோள்களை கருவறையாக்கி...
சில நொடி நானும்..
தாயாகிறேன்.

------------------------------------------------------------------------

என் விக்கல் நிறுத்த..
நீ கொடுத்த
முத்தத்தில்...
எனக்கு காய்ச்சலே
வந்துவிட்டது போ..

------------------------------------------------------------------------

என் காதலை பற்றி..
சொல்ல சொன்னாய்...
கவிதைகளை கொட்டினேன்..

உன் காதலை பற்றி..
சொல்ல சொன்னேன்..
வெட்கங்களை கொட்டினாய்..

தோல்வியை
ஒப்பு கொள்கிறது...
என் கவிதைகள்.

------------------------------------------------------------------------

எங்கோ நீயும்..
படித்துக் கொண்டிருப்பாய்...
என்ற நம்பிக்கையிலேயே..
பிறக்கின்றன...
உனக்கான என் கவிதைகள்.

என் காதலை பற்றி..
சொல்ல சொன்னாய்...
கவிதைகளை கொட்டினேன்..

உன் காதலை பற்றி..
சொல்ல சொன்னேன்..
வெட்கங்களை கொட்டினாய்..

தோல்வியை
ஒப்பு கொள்கிறது...
என் கவிதைகள்.



கவிதை.... காதல்...

காதல் ஒரு வித்தியாச மனநோய்...
நம்மை பிடிப்பவர்களை வெறுக்க சொல்லும்...
நமக்கு பிடித்தவர்கள் நம்மை வேறுத்துப்போனால்....

வீதிக்கு ஒரு சோகம்...
தெருவுக்கு ஒரு கவிஞன்....
ஏய் காதலே உன் ஊடகம் தான் என்ன???
இப்படி புழக்கத்தில் உள்ளேயே எங்களிடம்.....


கை கோர்த்த ஸ்பரிசங்கள்.....
கட்டிக்க சொன்ன கணங்கள்....
குழந்தை சிணுங்கல்கள்....
இன்னும் ஏன் சுமக்கிறேன் என்னை அறியாமலேயே?????
உன் முகம் கூட நினைவில்லையே எனக்கு!!!!!!!!


புயல் எச்சரிக்கை கொடி எண் எட்டை ஏற்றுங்கள்.....
அந்த தெரு முனையில்....
இது அவள் அலுவலகம் செல்லும் நேரம்...


எதாவது ஒரு தலைப்பு கொடுங்கள்....
இரண்டு நிமிடத்துக்குள் ஒரு கவிதை சொல்கிறேன்.....
தவறினால் ஏன் என கேளுங்கள் என் காதலியை.....
இப்போ புரிந்திருக்கும்.....
கவிதை என தலைப்பு கொடுத்து
அரை நிமிடமே ஆன என் தோழிக்கு......


என் கவிதைகள் எல்லாம்......
நாலு வரியை கூட தாண்டுவதில்லை....
பின்னே...
நாலு நிமிடத்துக்கு மேல் உன்னை
நேருக்கு நேராய் பார்க்கும் வலிமை எனக்கில்லை.....


மூளை ஏற்கிறது.....
மனசு மறுக்கிறது....
எப்படி உன்னை விட்டு கொடுக்க???....
நேற்று எவனையோ கூட்டிவந்து
காதலன் என்றாய் என்பதற்காக????......


கணவன், மனைவி சண்டை தீரும்....
இந்த வார ராசி பலன்ல போட்டிருக்கு...
நாம எப்போ சண்டை போட்டோம் ???...
இதுக்குதான்.....
கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா கேக்கரியா நீ......

கரை காதலிக்கு....
கடலின் இடைவிடா.....
காதல் முறையீடு....
அலை....

நிம்மதியை கொடு என்கிறேன்....
போய், தொலைத்த இடத்தில தேடு என்கிறாய்....
ஏய் சாமி!!!!! உனக்கு எப்படி புரியவைப்பது.....
கடைசியாய் அவளை இந்த கோவிலில்தான் பார்த்தேன்...

மனது முழுவதும் உன் நினைவுதான்......
வேறெதிலும் கவனம் இல்லை...
அவன் கேட்ட கேள்விக்கு, இவனுக்கு பதில்....
எதையோ நினைத்து தனியாய் சிரிக்கிறேன்....
பக்கத்தில் இருப்பவன் முறைக்கிறான்.....
சமாளிக்கிறேன், இப்படிடிடிடிடி .................
ஆமா!!!! இப்போ நான் என்ன சொல்ல வந்தேன்?????....

நீ பூசிய உதட்டு சாயத்தில் ஒட்டிகொண்டது.....
என் மனசு.....

நேற்று தான் முதல் குழந்தை பிறந்தது....
இன்று இரண்டாவது குழந்தைக்கு பெயர் வைத்து விட்டோமே!!!!!
கனவே....
கொஞ்சம் மெதுவாக போ.....
நான் அவளோடு அணு அணுவாக வாழ வேண்டும்...

விபத்து!!!?

நிகழப்போகிற
விபத்தைப்பற்றி எதுவுமே அறியாமல்
ஒரே தண்டவாளத்தில்
பயணித்துக் கொண்டிருக்கிற
ரயில்களைப் போல
நீ வந்துகொண்டிருக்கிற தெருவில்
நானும் நடந்து கொண்டிருக்கிறேன்...................................


உண்மை

பூக்கள் பூக்கும் ஓசையை
பதிவு செய்ய முயற்சி
செய்து தோல்வி கண்டநராம்
வீஞயானிகள்....
பாவம்!
உன் புன்னகை ஓசையை
கேட்காதனாலோ என்னவோ
தெரியவில்லை.... ...

ஒளித்துகொண்டேன்......

சில காலம்
எனக்குள் நானே
ஒளிந்து கொண்டிருந்தேன்.........

இப்பொழுது.......

எனக்குள் உன்னையும்
ஒளித்துகொண்டேன்......
என்னையும் அறியாமல்....


அழகு!

உன் வீட்டு
முகக்கண்ணாடியும்
அழாகாய்த்தான் இருக்கிறது!
உந்தன்
அழுக்கு பொட்டுக்களை
அழகாய் சுமந்தபடி!


பிரிவு

நிகழ்வுகளின் துவக்கமாய்
மௌனம்.
என் மரணத்தின் துவக்கமாய்
உன் பிரிவு.


காதல் தேர்வு

வார்த்தைகளுக்கு பூஜ்யம் மார்க்.

உன் விழிகள் மட்டும் சதம் அடித்தது

நான் எழுதிய காதல் தேர்வில்


பூ ...

யார் கூறியது நான் பறிக்கும்போது

இறந்துவிடுகிறேன் என்று ?

அவள் கூந்தலில்தான் எனது வாழ்கையே.............தொடரும்............


தொடங்குகிறேன்

வள்ளுவன் காலத்தில்
நீ வளர்ந்திருந்தால்
விரல் தேய
வடித்திருப்பான்
நான்காம் பால்
அழகென்று உன்னை

கம்பன் கற்ற
தமிழும்
தோற்றிக்கும்
உனக்கான
உவமை
தோன்றாமல்

வெள்ளித்திரையின்
விழித்திரையில்
நீ மலர்ந்திருந்தால்
மலர்களுக்கெல்லாம்
மகாராணி ஆகி இருப்பாய்

விண்ணுலகில்
விதைபட்டிருந்தால்
விண்மீன்களின்
தலைவியாகிருப்பாய்

ஆபரணத்தங்கத்தின்
விலையேற்றம்
ஒவ்வொரு நாளும்
நீ உன்னை மறந்து
மகிழும் போதுதான்

பொன் மொழிகளை
மாற்றுகிறேன்
பெண்ணே உன்னகாக

"என் யாதும் நீயே
யாவரும் உன்
அழகின் அடிமையே"

"நீரென்றி அமையாதடி
இவ்வுலகு
நீயின்றி அமையாதடி
இவ்வுயிர்"

உன் பாத சுவடுகளின்
தண்டவாளங்களில்
தொடங்குகிறேன்
என் கவிதை
பயணத்தை!!!
"நல்ல பயணம்
என்ற வாழ்த்துகளுடன்"!!!


தேவதைக்கு நெருக்கமானேன்...!!

கவனம் சிதறும் படி
ஆடை உடுத்தும் பெண்களுக்கு இடையே..
நேர்த்தியாய் உடுத்தியதால் கவனம் ஈர்த்த
அழகி நீ...!!

சிரிக்க தெரிந்தவர்கள்
கடவுளுக்கு நெருக்கமாகிறார்கள்
என்பார்கள்...
ஆனால் நானோ உன்னை
சிரிக்க வைத்து
தேவதைக்கு நெருக்கமானேன்...!!

அழகாய் இயற்க்கை காட்சி கண்டால்
இப்படி சொல்லுவாய் நீ
"அடடா என்ன ஒரு அழகு என்று...!?"

அழகி உன்னை கண்டதும்
இயற்க்கை இப்படி அதிசயிக்கும்..
அடடா எனக்கு போட்டியா..? என்று...!!"











Tuesday, April 27, 2010

என்னவளுக்காக

கருமேகங்கள் கதிரவன் மேல்
காதல் கொண்ட மாலையது...
ஒரு வழிப்பாதை தான் அது...
அவளின் ஓரபார்வையில்
சொர்கமயமானது எனக்கு...

ஓடும் நீர்தனில் உருண்டோடும்
கல் போல்...அவளின்
நினைவில் தல்லாடி தடுமாறி
நடைபோட்ட நாட்கள்...

பத்தே நாள் தான்
பஞ்சாய் பறந்தது...

எந்த இரவு வரக்கூடாது என்று
தவித்தேனோ அந்த இரவு...

பயணிக்க காத்திருந்தாள் என் வரவை
எதிர்நோக்கி
ஓரிரு நொடிதான் ஆனால்
அழுத்தமான பார்வை.!.
பதுமையாய் கையசைத்தாள்
இதயம் கனத்தது...

இமையினுள் முட்கள்
ஒவ்வொரு நொடியிலும் உணர்கிறேன்
அவளின் பிரிவை...

காதல் தன்னை நாடி வருபவர்களுக்கு
தன் காதலியின்(வலி) அருமையை
அமுதூட்டுகிறது...

மீண்டும் காத்திருக்கிறேன் பிரிவின் சிறையில்...
இதயத்தை சுமக்கும் முட்களை
தாங்கியபடி...
என்னவளுக்காக...