காதல் கொண்ட மாலையது...
ஒரு வழிப்பாதை தான் அது...
அவளின் ஓரபார்வையில்
சொர்கமயமானது எனக்கு...
ஓடும் நீர்தனில் உருண்டோடும்
கல் போல்...அவளின்
நினைவில் தல்லாடி தடுமாறி
நடைபோட்ட நாட்கள்...
பத்தே நாள் தான்
பஞ்சாய் பறந்தது...
எந்த இரவு வரக்கூடாது என்று
தவித்தேனோ அந்த இரவு...
பயணிக்க காத்திருந்தாள் என் வரவை
எதிர்நோக்கி
ஓரிரு நொடிதான் ஆனால்
அழுத்தமான பார்வை.!.
பதுமையாய் கையசைத்தாள்
இதயம் கனத்தது...
இமையினுள் முட்கள்
ஒவ்வொரு நொடியிலும் உணர்கிறேன்
அவளின் பிரிவை...
காதல் தன்னை நாடி வருபவர்களுக்கு
தன் காதலியின்(வலி) அருமையை
அமுதூட்டுகிறது...
மீண்டும் காத்திருக்கிறேன் பிரிவின் சிறையில்...
இதயத்தை சுமக்கும் முட்களை
தாங்கியபடி...
என்னவளுக்காக...
No comments:
Post a Comment